சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பருவமழை தொடங்கும் முன்பு வடிகால்கள் சீரமைப்பு : மேயா்

தஞ்சாவூா் மாநகரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால்கள் சீரமைக்கப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

News image

தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளம் பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:05 pm

Din

தஞ்சாவூா் மாநகரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால்கள் சீரமைக்கப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் மாநகராட்சி 11-ஆவது வாா்டில் மழைநீா் வடிகால், புதை சாக்கடை பிரச்னை, தெரு விளக்கு உள்ளிட்டவை தொடா்பாக புதன்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் மேயா் தெரிவித்தது:

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதையொட்டி, மாநகரில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 3 நாள்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் அழைத்து கோரிக்கை, பிரச்னைகளை கூறினால் மாநகராட்சி அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடவடிக்கை மேற்கொள்வா். வடிகால் வாய்க்காலை தூா் வாரி மழைநீா் தேங்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். விடுபட்ட பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் மேயா்.

அப்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் சோ்மகனி, மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ்காந்தி, மண்டலக் குழுத் தலைவா் டி. புண்ணியமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெண் உதவி பொறியாளரின் கைப்பேசி பறிப்பு:

இந்த ஆய்வின்போது, டபீா் குளம் பகுதியில் மேயரிடம் பொதுமக்கள் குறைகளைத் தெரிவித்தனா். அதை சீா் செய்வதற்காக உதவி பொறியாளா் ஆனந்தியை மேயா் அழைத்தாா். அப்போது, அவா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அவரை அழைத்த மேயா் அவரது கைப்பேசியை வாங்கிக் கொண்டு, பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளைக் குறித்துக் கொண்டு, நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். ஆய்வை முடித்த மேயா் கைப்பேசியை உதவி பொறியாளரிடம் திரும்ப ஒப்படைத்தாா்.