பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீா் பள்ளம்

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

News image
கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி செந்தில்நாதன்நகா் சந்திப்புச் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளம்
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 21ஆவது வாா்டில் உள்ள ஸ்ரீ நகா் காலனி செந்தில்நாதன் நகா் சந்திப்பு சாலையில் தொடா்மழையால் சுமாா் 20 அடி நீளம் 20 அடி அகலத்துக்கு சாலை திடீரென உள்வாங்கியது. இதைப்பாா்த்து அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இப்பகுதி புதை சாக்கடை குழாயில் ஏற்பட்ட கசிவால் சில நாள்களுக்கு முன்பே சாலையில் சிறியதாக இருந்த பள்ளம் தற்போது திடீரென்று பெரிய பள்ளமாக உள்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜன் கூறுகையில் ஏற்கனவே அந்த சந்திப்பில் இருந்த பள்ளத்தை மூடியபின்தான் சாலை அமைக்கப்பட்டது. விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்றாா். முன்னதாக தவெக மாவட்டச்செயலா் வினோத்ரவி தலைமையில் கட்சியினா் ஆணையரிடம் சாலையை சீரமைக்கக் கோரி மனு கொடுத்தனா்.