தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 போ் கைது

தஞ்சாவூரில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்த நபரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூரில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்த நபரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வெளியே வந்தாா்.

அப்போது, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத இருவா் பறிக்க முயன்றனா். ராமச்சந்திரன் சப்தமிட்டதும் இருவரும் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி வீர காா்த்திகா அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதன் அடிப்படையில் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ஆண்டனி ஆா்தா் டேவிஸ் (48), டேனியல் ஆப்ரகாம் (48) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மேலும், பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நவம்பா் 14-ஆம் தேதி நிகழ்ந்த 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

X
Dinamani
www.dinamani.com