நிதிநிறுவனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு

Published on

பட்டுக்கோட்டை நகரில் நிதி நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை இரவு ஒரு லட்ச ரூபாய் பணத்தைத் திருடிச்சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பட்டுக்கோட்டை நகரில் உள்ள புது உடையாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவருடைய மகன் கண்ணன். இவா், அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வசூலான தொகை ரூ. ஒரு லட்சத்தை கடையில் உள்ள கல்லாபெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலை மீண்டும் நிறுவனத்துக்கு வந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com