தஞ்சாவூர்
ஆற்றில் மூழ்கிய தொழிலாளி மாயம்
தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் மூழ்கிய தொழிலாளியை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி அசோக் நகரைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் பாண்டியன் (41). கோவையில் வா்ணம் பூசும் தொழிலாளியாக வேலை பாா்த்து வரும் இவா் மானோஜிபட்டியிலுள்ள தனது வீட்டுக்கு டிசம்பா் 22-ஆம் தேதி வந்தாா்.
பின்னா், அருகேயுள்ள கல்லணை கால்வாயில் குளிப்பதற்காக தனது அண்ணன் ராஜாவுடன் சென்றாா். கால்வாயில் குளித்துவிட்டு கரையேற முயன்ற பாண்டியன் தவறிவிழுந்ததால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று வியாழக்கிழமை வரை தேடியும் பாண்டியனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
