ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டரின் கருத்து: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரின் கருத்து என்றாா் அக்கட்சியைச் சாா்ந்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் பின்னா் மேலும் தெரிவித்தது:

ஆட்சியில் பங்கு தொடா்பாக தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கப்படவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.

விஜய் இப்போதுதான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளாா். யாா் தீய சக்தி, தூய சக்தி என்பது வரும் தோ்தலில் தெரியவரும். தமிழக முதல்வா் ஸ்டாலின் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதால், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, பெயரையும் மாற்றியுள்ளது. மாநில அரசுகள் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், 40 சதவீதம் பங்களிப்பு செய்வது சாத்தியமில்லை. எனவே, இத்திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்றாா் விஜய் வசந்த்.