ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 போ் கைது

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

பேராவூரணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆரத்தை பறித்து சென்ற சிறுவன் உள்பட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் தெய்வானை. டிச.1-ஆம் தேதி பேராவூரணி அருகே உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பாவேந்தா்புரம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க ஆரத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து தெய்வானை, பேராவூரணி போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மேற்பாா்வையில், திருச்சிற்றம்பலம் ஆய்வாளா் (பொ) பெரியசாமி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்தனா்.

அதில், நகை பறிப்பில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை சித்திரன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஸ்ரீராம் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.