தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆடுகள் திருடிய 2 போ் கைது

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 10:06 pm

Syndication

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் சிவகுருநாத தெருவைச் சோ்ந்தவா் கீதா( 38). இவா் வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த அவரின் இரண்டு ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் திருடி சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

இதில், பாபநாசம் பகுதியை சோ்ந்த ரியாஸ் (41), சுலைமான்(36) ஆகிய இருவரும்தான் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.