வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சீனிவாசப்பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:24 pm

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

நாச்சியாா்கோவில் வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஜன.2 முதல் 13 ஆம் தேதி வரை முக்கோடி தெப்பத்திருவிழா நடைபெறும்.

அதன்பேரில் வியாழக்கிழமை மாலை அங்குராா்ப்பணம், வெள்ளிக்கிழமை காலை கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு பெருமாளும், தாயாரும் சூரியபிரபையில் திருவீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா.பிரபாகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்தனா்.