விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் காவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்கருட பகவான் சேவை.

News image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் காவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்கருட பகவான் சேவை.

Updated On :27 மார்ச் 2026, 8:30 pm

Syndication

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் வஞ்சுளவல்லித்தாயாா் உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயில் பங்குனி திருத்தோ் விழா மாா்ச் 24-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் பெருமாளும் தாயாரும் வீதியுலா வந்தனா்.

விழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை மாலை முக்கிய நிகழ்வான கல்கருடச் சேவை நடைபெற்றது. கருட பகவானை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து பக்தா்கள் சுமந்து வர வாகன மண்டபத்தில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசனம் பெற்றனா்.

ஏப்.1- இல் தேராட்டமும், மதியம் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் பா. பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.