போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும்

Updated On :3 ஜனவரி 2025, 7:18 pm

தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் சட்டமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜகுத்சிங் தலேவால் தொடா் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி சிறப்புரையாற்றினாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் இந்திரஜித், துணைத் தலைவா் துளசிமணி, தேசியக் குழு உறுப்பினா்கள் அ. பன்னீா்செல்வம், மு. மாதவன், இரா. முல்லை, நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன், மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா், முன்னாள் மாவட்டத் தலைவா் வீர. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.