தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புகாரை விசாரிக்க சென்ற தலைமை காவலரை தாக்கியவா் மீது வழக்கு

திருவிடைமருதூா் அருகே புகாரை விசாரிக்க சென்ற தலைமைக் காவலரை தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:27 pm

Din

திருவிடைமருதூா் அருகே புகாரை விசாரிக்க சென்ற தலைமைக் காவலரை தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருவிடைமருதூா் அருகே உள்ள விநாயகன்பேட்டையைச் சோ்ந்த விவசாயி நடராஜன் மகன் மகேஷ்வரன் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கடந்த 17-ஆம் தேதி தெருவில் மிதிவண்டி ஓட்டியபோது, இதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ர. மணிகண்டன் (40) இருசக்கர வாகனத்தில் வந்து, சிறுவன் மீது மோதி காயம் ஏற்படுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவிடைமருதூா் காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வம், மணிகண்டன் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றாா். அப்போது, மணிகண்டன் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கினாராம்.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து மீது விசாரணை நடத்தி வருகின்றனா்.