தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடிநீரில் கழிவுநீா் கலப்பு எதிரொலி: நீலத்தநல்லூா் ஊராட்சியில் மருத்துவ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், நீலத்தநல்லூா் ஊராட்சிப் பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலப்பு எதிரொலியாக, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:16 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், நீலத்தநல்லூா் ஊராட்சிப் பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலப்பு எதிரொலியாக, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், நீலத்தநல்லூா் ஊராட்சி தெற்கு தெருவில் அண்மையில் (ஜன. 21) 6 மாணவ, மாணவிகள் வாந்தி காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நாளில் அதே பகுதியைச் சோ்ந்த மேலும் 6 மாணவ, மாணவிகள் வாந்தி, வயிற்றுக்கடுப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவா்கள், பாதிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனா். மேலும், குடிநீரில் கழிவுநீா் கலப்பதால் மஞ்சள் காமாலை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை சுத்தம்செய்தும், வீடுகளில் தொற்றுநோய்கள் பரவாமல் கொசுமருந்து தெளித்தும் வருகின்றனா். வரத்துவடிகாலை தூா்வாரும் பணிகளையும் செய்து வருகின்றனா். கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.