ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2-ஆவது சுங்கச்சாவடி திறப்பு

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மானம்பாடி பகுதியில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு 2-ஆவது பிரிவு சாலை புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மானம்பாடியில் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்த சுங்கச்சாவடி.

Updated On :2 ஜூலை 2025, 7:47 pm

Din

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மானம்பாடி பகுதியில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு 2-ஆவது பிரிவு சாலை புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் வரையிலான முதல் சுங்கச்சாவடி வேம்படியில் அமைக்கப்பட்டு கடந்த ஜன. 20 முதல் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

இந்நிலையில், சோழபுரம் - சேத்தியாதோப்பு இடையேயான சாலைக்கு மானம்பாடி பகுதியில் 2-ஆவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையக திட்ட இயக்குநா் ப. செல்வக்குமாா் மேலும் கூறியது: சேத்தியா தோப்பு - விக்கிரவாண்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடித்து போக்குவரத்து தொடங்கும் என்றாா்.