காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருக்கோடிக்காவல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் காரில் விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Updated on

திருக்கோடிக்காவல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் காரில் விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே திருக்கோடிக்காவலைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் சுதா்சன் (23). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவா் அவரது உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா் அங்கிருந்து வீடு திரும்பும்போது கல்லணை - பூம்புகாா் பிரதான சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனமும் சுதா்சன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதியது. இதில் நிலைதடுமாறி சுதா்சன் அருகே வந்த காரில் மோதி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் சுதா்சனை மீட்டு அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பந்தநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com