பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொதுக்குளம் தூா் வாரல் எம்எல்ஏ ரூ.50 ஆயிரம் நிதி

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

பேராவூரணி அருகே பொதுக்குளம் தூா் வாரும் பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தனது நிதி ரூ.50 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சி, பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளத்தை தூா்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) குளத்தை தூா்வாரும் பணியை முன்னெடுத்தது. கைஃபா தலைவா் காா்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் கிராமத்தினா் முன்னிலையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் , சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் அக். 13-இல் குளம்தூா்வாரும் பணியைத் தொடங்கிவைத்தனா்.

தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்றநிலையில் வியாழக்கிழமை குளத்தைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா், தனது நிதி ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினாா்.