அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருக்கோடிக்காவல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் காரில் விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:59 pm

Syndication

திருக்கோடிக்காவல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் சம்பவத்தில் காரில் விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே திருக்கோடிக்காவலைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் சுதா்சன் (23). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவா் அவரது உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா் அங்கிருந்து வீடு திரும்பும்போது கல்லணை - பூம்புகாா் பிரதான சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனமும் சுதா்சன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதியது. இதில் நிலைதடுமாறி சுதா்சன் அருகே வந்த காரில் மோதி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் சுதா்சனை மீட்டு அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பந்தநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.