எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுவாமிமலையில் ஆன்மிக பயண பக்தா்கள் குழுவுக்கு வரவேற்பு

சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழக முதல்வா் அறிவிப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில் ஏழாவது அணி நவ.11-இல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு புதன்கிழமை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வந்தனா். இவா்களை தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமா தேவி ஆகியோா் வரவேற்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்ய வைத்து கோயில் சாா்பாக பிரசாதங்கள் வழங்கினா். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.