அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாகூா் தா்கா கந்தூரி விழா 100 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டனம் மாவட்டம், நாகூா் தா்கா கந்தூரி விழா நவ.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நவ.30 -இல் சந்தனக் கூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள் என்பதால் நவ.21 முதல் டிச.1 வரை சென்னை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய ஊா்களிலிருந்தும், நாகப்பட்டினம் நாகூா் மற்றும் காரைக்கால் - நாகூா் வழித்தடங்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் நவ.21 முதல் டிச.1 வரை கூடுதலாக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தை ஒருங்கிணைக்க நாகூா் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே பொதுமக்கள் இச்சிறப்பு பேருந்துசேவைகளைப் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.