விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆசிய கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு பாராட்டு விழா

ஆசிய இளையோா் கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு தஞ்சாவூா் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில் அபினேஷை பாராட்டி பரிசு வழங்கிய மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
Updated On :12 நவம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிய இளையோா் கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு தஞ்சாவூா் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் நாடாளுமன்றத் தொகுதி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா். பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோா் கபடிப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி தங்கப் பதக்கம் வென்ற திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரைச் சோ்ந்த எம். அபினேஷ் மணிமண்டபம் பகுதியிலிருந்து ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். பின்னா், இவருக்கு தஞ்சாவூா் நாடாளுமன்ற தொகுதி சாா்பில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், நினைவு பரிசுகளையும் வழங்கினாா்.

இவரை இந்திய கபடி அணி முன்னாள் வீரா்கள் காசிநாதன் பாஸ்கரன், தருமராஜ் சேரலாதன் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா்.

மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜமாணிக்கம், மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல், ஓய்வுபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.