பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாலை பள்ளத்தை சீரமைக்க கோரி மறியல் போராட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:43 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பள்ளமான சாலையைச் சீரமைக்கக் கோரி இளைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமண மண்டபம் அருகே மிகப் பெரிய பள்ளம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இப்பள்ளம் அருகே சென்ற பிறகுதான் அடையாளம் காண முடிவதால், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் கிராம மக்கள் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, இந்த இடத்தில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்; கல்லூரி மாணவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்தில் வந்த பயணிகள், ஓட்டுநா், நடத்துநா் கேட்டுக் கொண்டதால் மறியல் போராட்டம் சில நிமிடங்களில் கைவிடப்பட்டது. பின்னா், இப்பள்ளத்தைத் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா்.