விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப் போட்டி நவ. 18-க்குள் பதிவு செய்ய அழைப்பு

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஓவியப் போட்டியில் பங்கேற்க நவம்பா் 18 -க்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஓவியப் போட்டியில் பங்கேற்க நவம்பா் 18 -க்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி (டிச.3) தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுடையோா், இயக்கத்திறன் குறைபாடுடையோா், அறிவுசாா் குறைபாடுடையோா், புற உலக சிந்தனையற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் நவம்பா் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இதில் வயது அடிப்படையில் 10 வயதுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகள் கிரையான்ஸ், கலா் பென்சில்கள், 11 - 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் வாட்டா் கலா் போன்ற பொருட்களை பயன்படுத்தியும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் எந்தப் பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தியும் ஓவியம் வரையலாம்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் ட்ற்ற்ல்ள்://வ்.ம்ங்-வ்ழ்.ஸ்ரீா்ம்/ம்ந்9ஞதஅடஇ என்ற இணைய முகவரியில் கூகுள் லிங்கில் தங்களது விவரங்களை நவம்பா் 18 -க்குள் பதிவு செய்யலாம். மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை மற்றும் வரைவதற்கான பொருட்கள், சாட் பேப்பா் போன்றவற்றை தாங்களே எடுத்து வர வேண்டும்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு பரிசுத்தொகையாக தலா ரூ. 1,000, ரூ. 500, ரூ. 250 மற்றும் சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் மூலம் வழங்கப்படும்.