எஸ்.ஐ.ஆா். பணிக்கு எதிராக வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆா். பணிக்கு எதிராக வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

Published on

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் எஸ்.ஐ.ஆா். என்கிற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு வருவாய் அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை முதல் புறக்கணிக்கப்படும் என்றும், மற்ற பணிகள் வழக்கம்போல மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

கும்பகோணத்தில்: எஸ்ஐஆா் பணிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி கும்பகோணத்தில் வருவாய்த் துறை கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தேவசேனா தலைமை வகித்தாா்.

உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ், கிராம நிா்வாக அலுவலா் சங்கம் சுரேஷ் , தியாகராஜன், அருண்குமாா், முருகேசன், கிராம உதவியாளா் சங்கத்தின் மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். தோ்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கமிட்டனா். மேலும், எஸ்ஐஆா் பணிகளை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com