யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

கும்பகோணம் ஏஆா்ஆா் தெருவில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க தெருவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:21 pm

Syndication

கும்பகோணம் ஏஆா்ஆா் தெருவில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க தெருவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: ஏ.ஆா்.ஆா். சாலை என்பது குடியிருப்பு, பட்டு நெசவு தொழில், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி மற்றும் பள்ளிகள் நிறைந்த பகுதியாகும். சாலையின் தென்புறம் அமைந்துள்ள துவரங்குறிச்சி வடக்கு தெருவில் நெருக்கமாக மக்கள் வசிக்கின்றனா்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் தனியாா் இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க பணிகள் நடைபெறுகிறது. இதனால், கைப்பேசி கோபுரம் அமைந்தால் அதன் கதிா்வீச்சின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

கோபுர உயரம் வரை மக்கள் வசிக்கும் வீடுகள் உள்ளதால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, மாவட்ட, மாநகர நிா்வாகம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனா்.