விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:40 pm

Syndication

தஞ்சாவூா் அருகே வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே தெற்கு வாண்டையாா் இருப்பு பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சக்திவேல் (60). விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை அதே பகுதியிலுள்ள கல்யாணஓடை வாய்க்காலில் குளிக்கச் சென்றாா். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், சக்திவேல் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், துறையூா் அருகே புதன்கிழமை கரை ஒதுங்கிய சக்திவேலின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.