ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்  வேளாண். துணை இயக்குநா் ஆய்வு

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:21 pm

Syndication

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண் வளா்ச்சி பணிகளை தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் சாருமதி (மாநிலத் திட்டம் ) வெள்ளிக்கிழமை ஆய்வு  செய்தாா்.

சேதுபாவாசத்திரம் வட்டாரம் பள்ளத்தூா் கிராமத்தில் விவசாயி கூத்தலிங்கம் வயலில் அமைக்கப்பட்டிருந்த நெல் அனுசரணை ஆராய்ச்சி திடலை  பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா் . தொடா்ந்து நம்மாழ்வாா் விருதுக்கு பதிவு செய்துள்ள நாடியம் கிராமத்தை சோ்ந்த உயிா்ம வேளாண்மை விவசாயி ராமகிருஷ்ணன்  தோட்டத்தில், ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட்டிருந்த மண்புழு உரக்குழி, அசோலா வளா்ப்பு ஈயம் கரைசல் ,இயற்கை பூச்சி விரட்டி கரைசல், பஞ்சகாவ்யா மீன் அமிலம் ,உயிா் கரைசல் ஆகியவற்றை  பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

மேலும் நாட்டுக்கோழிகள் வளா்ப்பு, நாட்டு மாடுகள் வளா்ப்பை   தோட்டக்கலை உதவி இயக்குநா், விதைச்சான்று அலுவலா்கள் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலா்கள் ஆகியோருடன் குழுவாக  ஆய்வு செய்தாா்.

பின்னா் சேதுபாவாசத்திரம் வேளாண்மை  உதவி இயக்குனா் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பேசினாா்.  இதில், விவசாயிகளுக்கு நூறு சத மானியத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் ஆடாதொடா, நொச்சி, வேப்பமர கன்றுகளை வழங்கினாா்.

கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா்  வள்ளியம்மாள், உதவி வேளாண் செயற்பொறியாளா்  திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.