புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருட்டு போன 10 இரு சக்கர வாகனங்கள் மீட்பு: 2 போ் கைது

தஞ்சாவூரில் திருட்டு போன 10 இரு சக்கர வாகனங்களைக் காவல் துறையினா் மீட்டு, 2 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:15 am

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் திருட்டு போன 10 இரு சக்கர வாகனங்களைக் காவல் துறையினா் மீட்டு, 2 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை செருவாவிடுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதாக மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் வி. சந்திரா தலைமையில் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதன் மூலம் திருவையாறு நடுக்கடையைச் சோ்ந்த ஆஷிக் (31), அபிப் ரஹ்மான் (51) ஆகியோா் திருடியது தெரிய வந்தது. இருவரையும் காவல் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 10 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலா்கள், காவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.