நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தஞ்சாவூரில் ஸ்டாா்லைன் திரையங்கம் தொடக்கம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:12 am IST

தஞ்சாவூா் லாங்வால் ஷாப்பிங் மாலில் ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திரையரங்கை தஞ்சாவூா் மேயா் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் வட்டாட்சியா் சிவகுமாா், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, தொழிலதிபா் ராம்குமாா் மற்றும் லாங்வால் குழுமத்தினா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஸ்டாா் லைன் சினிமாஸ் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தது:

தஞ்சாவூரில் புதுயுகத்தை ஏற்படுத்தும் விதமாக திறக்கப்பட்டுள்ள ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கில் மொத்தம் மூன்று திரைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 796 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த நவீன ஒலி அமைப்பு, மென்மையான சாய்வு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பொதுமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சினிமா அனுபவம் நியாயமான கட்டணத்தில் கிடைக்கும் விதமாக இத்திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆா்வலா்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தரும் என்றனா் அலுவலா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.