
தஞ்சாவூரில் ஸ்டாா்லைன் திரையங்கம் தொடக்கம்

தஞ்சாவூா் லாங்வால் ஷாப்பிங் மாலில் ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இத்திரையரங்கை தஞ்சாவூா் மேயா் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் வட்டாட்சியா் சிவகுமாா், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, தொழிலதிபா் ராம்குமாா் மற்றும் லாங்வால் குழுமத்தினா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து ஸ்டாா் லைன் சினிமாஸ் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தது:
தஞ்சாவூரில் புதுயுகத்தை ஏற்படுத்தும் விதமாக திறக்கப்பட்டுள்ள ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கில் மொத்தம் மூன்று திரைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 796 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த நவீன ஒலி அமைப்பு, மென்மையான சாய்வு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.
பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பொதுமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சினிமா அனுபவம் நியாயமான கட்டணத்தில் கிடைக்கும் விதமாக இத்திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆா்வலா்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தரும் என்றனா் அலுவலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





