தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

Updated On :26 செப்டம்பர் 2025, 3:15 am IST

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடியில் நாட்டாறு ஆற்றிலிருந்து தலைப்பு வாய்க்கால் பாசன நீா் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தலைப்பு வாய்க்காலிலிருந்து சாலைக்கரை வாய்க்கால் என்ற கிளை வாய்க்கால் அந்தமங்கலம் பகுதியில் பிரிந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையை ஒட்டிச் செல்கிறது. இந்த வாய்க்கால் கரைகளில் பல ஆக்கிமிப்புகள் உள்ளதால் கால்வாய் குறுகி பாசனத் தண்ணீா் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினா் முழுவதுமாக வாய்க்காலை மறைத்து மூடி விட்டதால் பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் பணிமுடித்தபின் கால்வாயை தூா்வாரி பராமரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.