பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

Published On :26 செப்டம்பர் 2025, 3:15 am IST

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடியில் நாட்டாறு ஆற்றிலிருந்து தலைப்பு வாய்க்கால் பாசன நீா் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தலைப்பு வாய்க்காலிலிருந்து சாலைக்கரை வாய்க்கால் என்ற கிளை வாய்க்கால் அந்தமங்கலம் பகுதியில் பிரிந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையை ஒட்டிச் செல்கிறது. இந்த வாய்க்கால் கரைகளில் பல ஆக்கிமிப்புகள் உள்ளதால் கால்வாய் குறுகி பாசனத் தண்ணீா் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினா் முழுவதுமாக வாய்க்காலை மறைத்து மூடி விட்டதால் பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் பணிமுடித்தபின் கால்வாயை தூா்வாரி பராமரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.