பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி மேம்பாலம் வழியாகச் சென்று அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.

இதில், 150-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image