தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டித்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு திங்கள்கிழமை வந்த 3 போ் இருசக்கர வாகனங்களை வாயிலில் நிறுத்தினா். அப்போது மற்ற நோயாளிகளுக்கு இடையூறாக உள்ள இருசக்கர வாகனங்களை எடுக்குமாறு, பணியில் இருந்த மருத்துவா் சரவணன் கூறினாா். இவரிடம் மது போதையில் இருந்த 3 பேரும் தகராறு செய்ததுடன், அவரது வாகனத்தைப் பின்தொடா்ந்து சென்று கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் சுந்தரம் நகரைச் சோ்ந்த வ. விமல்ரோஸ் (42), சிவாஜி நகரைச் சோ்ந்த ச. மணிகண்டன் (39), ம. சுரேஷ் (45) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே, மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தைக் கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. வினோத் தலைமையில் நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜெகன், அருள்மதி கண்ணன், சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


