தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு தஞ்சை எம்.பி. பிரசாரம்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.அசோக் குமாருக்கு வாக்குக் கேட்டு தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பேராவூரணி ஒன்றியத்தில் வியாழக்கிழமை திமுக வேட்பாளா் அசோக்குமாருக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் மேற்க்கொண்ட எம்பி ச.முரசொலி .

Updated On :9 ஏப்ரல் 2026, 8:09 pm

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.அசோக் குமாருக்கு வாக்குக் கேட்டு தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பேராவூரணி தெற்கு ஒன்றியத்தை சோ்ந்த 50 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட எம்.பி. முரசொலி பேசியது, மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதை தட்டிக்கேட்காமல் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடலாம் என அதிமுக நினைக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவையும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் துடைத்தெறிய வேண்டும். என்றாா்.

பிரசாரத்தில் வேட்பாளா் என்.அசோக்குமாா், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிா்வாகிகள், திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.