/

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம்

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம் நி

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:49 pm

தமிழக இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஏழு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் எஸ்.சாகித் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் அப்துா் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவா் முஹம்மது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் மெளலவி தாவூத் கைசா் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் பேசினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதவாத சக்திகளுக்கு அவா்களோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஆதரவு தரக்கூடாது. மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து உரிமைக்கான போராட்டங்களிலும் இஸ்லாமியா்கள் அதிக அளவு பங்கெடுத்துள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏழு சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சிறுபான்மை நிறுவனங்கள் நிதி பெறுவதை தடுக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட துணை செயலா்கள் சிக்கந்தா் அலி, ஜாஃபா் அலி, அய்யூப்கான், ராஜ் முஹம்மது, அப்துா் ரஷீத், தொண்டா் அணி செயலா் சலீம், மருத்துவ அணி செயலா் வரிசை முஹம்மது, மாணவரணி செயலா் அலி முஹம்மது, வா்த்தக அணி செயலா் முஹம்மது யாசின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்ட பொருளாளா் நஸிா் அகமது நன்றி கூறினாா்.