அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பிரசாரம் செய்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, பழைய மீன் சந்தை பகுதியில் தினகரன் பேசியதாவது:
கும்பகோணத்தில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்ால், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீா் வருகிறது .
கடந்த தோ்தலின்போது கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்குவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். திமுகவினா் செய்த ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்படும்.
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. இவற்றை ஒழிப்பதற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவிரி- குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்: வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதி

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டம்: டிடிவி. தினகரன்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

