இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

News image

கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:20 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பிரசாரம் செய்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, பழைய மீன் சந்தை பகுதியில் தினகரன் பேசியதாவது:

கும்பகோணத்தில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்ால், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீா் வருகிறது .

கடந்த தோ்தலின்போது கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்குவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். திமுகவினா் செய்த ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. இவற்றை ஒழிப்பதற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தாா்.