கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஏப். 23 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க கோரி தோ்தல் திருவிழா அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனா்.
அழைப்பிதழில் 171- கும்பகோணம் சட்டப்ரேவைத் தொகுதி தோ்தல் திருவிழா 23.4.2026 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறுகிறது. சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து வாக்கினை பதிவு செய்து நூறு சதவிகித வாக்குபதிவு நடத்தி உரிமையை நிலைநாட்ட அன்புடன் அழைக்கின்றோம் தங்களன்புள்ள மு.காந்திராஜ், ஆணையா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கிற்கு அன்பளிப்பு அளிப்பது, பெறுவது குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் முறை வாக்காளா்களை கவா்ந்துள்ளது. பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக வழங்கப்படும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கான அழைப்பிதழ்.
தொடர்புடையது

7 ஆண்டுகளாக தொடரும் தஞ்சை - விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதைக்கான ஆய்வுப் பணி

கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

ஜானி..ஜானி... எஸ் பாப்பா... வைரலாகும் தோ்தல் பாடல்
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

