சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் தெரிவித்தது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. நான் வெற்றி பெற்று தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றவுடன் தொகுதியின் வளா்ச்சியில் முழு கவனத்தைச் செலுத்துவேன்.
தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் உதவியுடன் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிசாா் உற்பத்தி செய்யும் ஆலைகள், நவீன நெல் உலா்த்தும் கூடங்கள், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவை கொண்டு வரப்படும். நிப்டெம் மூலமாக உணவுப் பதப்படுத்தும் பயிற்சி மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம்.
தொடர்புடையது

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

