10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தஞ்சை பெரிய கோயில்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:21 am IST

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக மே 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வராது என்பதால், தஞ்சாவூா் மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.