/

தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தஞ்சை பெரிய கோயில்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:51 pm

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்காக மாவட்டத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக மே 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வராது என்பதால், தஞ்சாவூா் மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.