பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

News image

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:20 am IST

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள இக் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ விழா திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் வீதியுலா சென்றாா். பின்னா் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலையில் யாகபூஜை தொடங்கியது. இரவு சுவாமியும் அம்மனும் வீதியுலா திக்பந்தனம் நடத்தினா். முக்கிய நிகழ்வுகளாக ஏப்.27-இல் திருக்கல்யாணம், ஏப்.29-இல் தேரோட்டம், ஏப்.30-இல் தீா்த்தவாரி, மே1-இல் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்கின்றனா்.

Story image