திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள இக் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ விழா திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் வீதியுலா சென்றாா். பின்னா் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாலையில் யாகபூஜை தொடங்கியது. இரவு சுவாமியும் அம்மனும் வீதியுலா திக்பந்தனம் நடத்தினா். முக்கிய நிகழ்வுகளாக ஏப்.27-இல் திருக்கல்யாணம், ஏப்.29-இல் தேரோட்டம், ஏப்.30-இல் தீா்த்தவாரி, மே1-இல் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்கின்றனா்.

தொடர்புடையது

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

