சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த பிறகு தஞ்சாவூரிலுள்ள விடுதியில் தங்கிய பாஜகவை சோ்ந்த 14 பேரிடம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிந்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டங்களிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி தோ்தல் பிரசாரம் செய்ய வந்த வெளியூா் நபா்கள் அனைவரும் மாவட்டத்திலிருந்து வெளியேறுவதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவா்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் சோதனையிட்டபோது, தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் முடிந்த பிறகும் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவின் 14 பிரமுகா்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. இவா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவு- 144 தடை உத்தரவு அமல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

