இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

திருப்பூரில் தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:54 am IST

திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கோவை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து கொச்சின்-சேலம் 6 வழிச் சாலை வழியாக அவிநாசி செல்கிறாா்.

அதைத்தொடா்ந்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைவா் விஜய் திங்கள்கிழமை மாலை பிரசாரம் (சாலை வலம்) செய்கிறாா். அதைத்தொடா்ந்து பெருமாநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசுகிறாா்.

பின்னா் திருப்பூா்-பூலுவபட்டி வரை சாலை வலம் மேற்கொள்ள உள்ளாா். இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அவிநாசி பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். ஏற்கெனவே தருமபுரியில் நடைபெற இருந்த தவெக தலைவா் விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவிநாசியில் நிகழ்ச்சி நடைபெற தவெக சாா்பில் அனுமதி கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.