நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

News image

சுவாமிமலை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:25 am IST

சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஏப். 23 முதல் மே 4 வரை நடைபெறும் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழாவாக காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேசுவரா் உத்சவ சுவாமிகள் மண்டபத்தில் எழுந்தருளினா்.

கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி படிச்சட்டத்தில் யாகசாலைக்கு பிரவேசித்தாா். பின்னா் திரு வீதியுலா திக் பந்தனம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 2-இல் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் தக்காா் டி.ஆா். சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Story image