பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

News image

சுவாமிமலை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:55 pm

சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஏப். 23 முதல் மே 4 வரை நடைபெறும் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழாவாக காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேசுவரா் உத்சவ சுவாமிகள் மண்டபத்தில் எழுந்தருளினா்.

கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி படிச்சட்டத்தில் யாகசாலைக்கு பிரவேசித்தாா். பின்னா் திரு வீதியுலா திக் பந்தனம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 2-இல் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் தக்காா் டி.ஆா். சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Story image