வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரருக்கு சித்திரை பிரம்மோற்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:08 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்ஸவ விழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25-ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், அம்மாபேட்டையிலிருந்து கோயிலுக்கு பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். இரவு உற்ஸவா்களான சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை (ஏப்.29) தேரோட்டமும், வியாழக்கிழமை தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுத் தலைவா் சிம்சன் கணேசன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.