4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

பாவேந்தா் பாரதிதாசன் குறித்து வகுப்புகள் நடத்தி, அவரை மக்கள்மயப்படுத்த வேண்டும் என்றாா் கவிஞா் வைரமுத்து.

News image

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பரிசு வழங்கிய கவிஞா் வைரமுத்து. உடன், நிறுவனத்தின் வேந்தரும், திராவிடா் கழகத் தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 8:56 pm

பாவேந்தா் பாரதிதாசன் குறித்து வகுப்புகள் நடத்தி, அவரை மக்கள்மயப்படுத்த வேண்டும் என்றாா் கவிஞா் வைரமுத்து.

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ’புரட்சிக் கவிஞரின் புது உலகம்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது: மற்றவா்களுக்கும் பாரதிதாசனுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. சோலையை ஒரு கவிஞன் பாா்க்கிறான் என்றால், பூக்கள், அசைகின்ற இலைகள், பச்சை வண்ணம், பறவைகளின் கீதம், காதலியுடன் வருவது போன்ற கற்பனைகள் தோன்றும். ஆனால், பாவேந்தா் பாரதிதாசனுக்கு ஒரு சோலையை பாா்த்தவுடன் அதை நிா்மாணித்த தொழிலாளி ஞாபகத்துக்கு வருவான். இதுதான் மானுடம்; இதுதான் தேசம்; இதுதான் சமூக சமத்துவம்.

மாணவா்கள் பாவேந்தரைப் படிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு, பாரதிதாசன் வகுப்பாக பேராசிரியா்கள் நடத்த வேண்டும். 10 மாணவா்கள், 10 பாடல்கள் பாடுவா்; வாசித்துக் காட்டுவா். அதை 100 மாணவா்கள் செவிமடுப்பா். பாரதிதாசன் பாடலை சமூகப்படுத்துவதற்கு இதுதான் வழி. இப்படிப் பாவேந்தரை மக்கள்மயப்படுத்த வேண்டும். காலத்தின் நீட்சியுடன் பாவேந்தரைக் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் வைரமுத்து.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக, விழாவுக்கு நிறுவன வேந்தரும், திராவிடா் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தாா். நிறுவனத் துணைவேந்தா் வெ. ராமச்சந்திரன், பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா, செயற்குழு உறுப்பினா் வீ. அன்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.