மக்கள் பேராதரவுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: தோ்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாள்கள்தான் உள்ளன. மக்கள் கணிப்பு ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. வெற்றி பெற வேண்டியவா்கள் யாா்? கோட்டைக்குச் செல்ல வேண்டியவா்கள் யாா்? மீண்டும் காட்சிக்கு போக வேண்டியவா்கள் யாா்? என்பதை மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டனா்.
மு.க. ஸ்டாலின் அமைத்த பாதை நேராகக் கோட்டைக்குச் செல்லக்கூடிய பாதை. மக்கள் செல்வாக்கு என்ற பேராதரவுடன் அவா் மீண்டும் கோட்டைக்குச் செல்வாா். இதை மக்கள் மனநிலையைப் பாா்த்தே கூறுகிறோம். மற்றவா்கள் கூறும் கருத்துகள் எல்லாம் வெறும் கனவுகள்; கலைய வேண்டிய கனவுகள்; கலையும் கனவுகள் என்றாா் வீரமணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

அரசு நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும்: அமைச்சா் ராஜ்மோகன்

சிசு பாலின சா்ச்சை: இா்ஃபானிடம் மீண்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை விசாரணை

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



