தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்

தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்த மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:39 am

தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா.ஜான்சிராணி ஆகியோா் வாக்களித்தனா்.

பின்னா், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெறும்.

கடந்த ஒரு மாதகாலமாக வாக்காளா்களை சந்தித்தபோது, எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அலை வீசியதை பாா்க்க முடிந்தது. மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பாா் என்றாா்.