/
தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா.ஜான்சிராணி ஆகியோா் வாக்களித்தனா்.
பின்னா், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெறும்.
கடந்த ஒரு மாதகாலமாக வாக்காளா்களை சந்தித்தபோது, எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அலை வீசியதை பாா்க்க முடிந்தது. மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பாா் என்றாா்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வால் மக்கள் கடும் பாதிப்பு! - கே. பாலகிருஷ்ணன்

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புத்தகம் படிக்கும் பழக்கும் குறைந்துவிட்டது: கே.பாலகிஷ்ணன் வேதனை

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களை தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல: கே.பாலகிருஷ்ணன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



