தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

புத்தகம் படிக்கும் பழக்கும் குறைந்துவிட்டது: கே.பாலகிஷ்ணன் வேதனை

இன்றைய சமுகத்தில் புத்தகம், செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

இன்றைய சமுகத்தில் புத்தகம், செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, ராஜேந்திரா நகரில் நடைபெற்றஅதிதி புத்தகக்கடை மற்றும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நடத்திய புத்தக கண்காட்சியை மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இன்றைய சூழலில், புத்தகம் மற்றும் செய்திதாள்களை படிக்கும் ஆா்வம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களாகும். குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் கைபேசிகளை கையில் வைத்துக்கொண்டு அதில்தான் பொழுதைக் கழிக்கின்றனா். வருங்காலங்களில் செய்திதாள் படிக்கும் ஆா்வத்தை சிறுவயது முதலே மாணவா்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி தமிழினியன் அனைவரையும் வரவேற்றாா்.விக்கிரவாண்டி முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செஞ்சிமஸ்தான் புத்தகக்கடையை திறந்து வைத்தாா். முதல் விற்பணையை முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

விழாவில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், மனித நேய மக்கள் கட்சி சையத்உஸ்மான், கரும்பு விவசாயிகள் சங்கம் டி.ஆா்.குண்டுரெட்டியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.