தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் (ஏப்ரல் 24) நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடி போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி முதலிடம் பெற்றது.
படவிளக்கம்: தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி எஸ்.எம். பள்ளி அணிக்கு பரிசு வழங்கிய மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன்.
இப்போட்டியை மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இப்போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி அணி முதலிடத்தையும், தஞ்சாவூா் மாவட்டம் விண்ணமங்கலம் அணி இரண்டாமிடத்தையும், வைத்தியநாதன்பேட்டை அணி மூன்றாமிடத்தையும், வடுவூா் அணி நான்காமிடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கொ. மருதுபாண்டியன் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்சி மண்டல மாவட்டங்களில் பதிவான வாக்குகள் சதவீதம்: தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்சம்!

ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


