நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காரில் ஆயுதங்கள் வைத்திருந்த பாஜக மாவட்ட நிா்வாகி கைது

News image

கைது செய்யப்பட்ட வேதா செல்வம்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

கும்பகோணத்தில் காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிா்வாகியை போலீஸாா் கைது செய்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

கும்பகோணம் சத்யம் நகா் பகுதியை சோ்ந்தவா் ஆ. வேதா (எ) வேதசெல்வம் (50). இவா் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலராக உள்ளாா்.

கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கும்பகோணம் -தஞ்சாவூா் பிரதான சாலையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக காரில் வேதசெல்வம் வந்தாா். காரை போலீஸாா் சோதனை செய்தபோது காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

இதையடுத்து, வேதசெல்வம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து வேதசெல்வம் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.