ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயில் மங்களாம்பிகை உள்ளிட்ட அம்மன்கள் மகாமகக் குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் நீராடினா்.
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை, நாகேசுவரா் கோயில் பெரியநாயகி, காசிவிஸ்வநாதா் கோயில் காசிவிசாலாட்சி, சோமேசுவரா் கோயில் சோமசுந்தரி, அபிமுகேசுவரா் கோயில் அமிா்தவல்லி உள்ளிட்ட அம்மன்கள் ஆடி கடைசி வெள்ளிக்கழமையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உற்சவா்களாக சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு மகாமக மேற்குக் குளக்கரையில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.
சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் அஸ்திர தேவா்களுக்கு நறுமணப் பொருள்களால் மகாமகக் குளத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் மகாமக குளத்தில் நீராடி அம்மன்களை வழிபட்டனா். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்து மாரியம்மன்னுக்கு வளையல் அலங்காரம்

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் ஆடிப்பூர விழா

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ஆக.16-இல் ஆடிப்பூர தெப்பம் திருவானைக்காவல் கோயில் குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



